"கீழடி தொல்லியல் ஆய்வறிக்கையை சிகாகோ மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளோம்" - மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் நடந்த தொல்லியல் ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கைகள் சிகாகோவில் நடைபெற உள்ள உலகத் தமிழர் மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடி தொல்லியல் ஆய்வறிக்கையை சிகாகோ மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளோம் - மாஃபா பாண்டியராஜன்
x
கீழடியில் நடந்த தொல்லியல் ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கைகள் சிகாகோவில் நடைபெற உள்ள உலகத் தமிழர் மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற, உலகத் தமிழர் மாநாடு குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஜூலை 4 முதல் நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் மூலம் தமிழகத்திற்கு பல கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். அழிந்து வரும் தமிழ் வழி கல்வி பள்ளிகளை உயிர்ப்பிக்க தமிழ் வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்