காரை திருடி செல்லும் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

சத்தியமங்கலத்தில் கொள்ளையர்கள் காரை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
காரை திருடி செல்லும் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
x
சத்தியமங்கலத்தில் கொள்ளையர்கள் காரை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த செந்தில் தனது கார் திருடு போகிவிட்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். அவரது வீடு இருக்கும் வீதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில், இரவு 10 மணியளவில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் காரை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதை வைத்து குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்