பெற்றோரை இழந்த பட்டதாரி பெண்ணுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உதவி : நெகிழ்ந்த கிராம மக்கள்

பெற்றோரை இழந்த பட்டதாரி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை அனைவரையும் நெகிழ வைத்தது.
பெற்றோரை இழந்த பட்டதாரி பெண்ணுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உதவி :  நெகிழ்ந்த கிராம மக்கள்
x
பெற்றோரை இழந்த பட்டதாரி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை அனைவரையும் நெகிழ வைத்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் தமிழரசி. பெற்றோரை இழந்து தங்கை, தம்பியுடன் வறுமையில் வாழ்ந்து வரும் தமிழரசி, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு, ஆதரவற்ற தங்களுக்கு உதவுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். இது தொடர்பாக, நடவடிக்கை எடுத்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க உத்தரவிட்டார். அரசு பணிக்கான ஆணையும் தமிழரசியின் வீட்டிற்கே நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.  

Next Story

மேலும் செய்திகள்