பொங்கல் பரிசுப் பெற குவிந்த பொதுமக்கள்... தள்ளுமுள்ளு நிகழ்ந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசுப்பொருட்கள் வாங்க பலர் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொங்கல் பரிசுப் பெற குவிந்த பொதுமக்கள்... தள்ளுமுள்ளு நிகழ்ந்ததால் பரபரப்பு
x
திருவண்ணாமலையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசுப்பொருட்கள் வாங்க பலர் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்தளாங்குளத் தெருவில் அமைந்துள்ள, கூட்டுறவு ரேஷன் கடையில், பொங்கல் இலவச பொருட்கள் வழங்கபட்டு வந்த நிலையில், திடீரென்று பலர் கடைக்குள் நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி, சிலர் தடுமாறி கீழே விழுந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பரிசுப்பணம் ஆயிரம் கிடைக்காதோ என்ற எண்ணத்தில் பொதுமக்கள் உள்ளே நுழைய முயன்றதே நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்