பறிமுதல் செய்யப்பட்ட காரில் திடீர் தீ...

சென்னை வடபழனி காவல்நிலையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட கார் திடீரென தீப்பிடித்து எரிந்த‌தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட காரில் திடீர் தீ...
x
சென்னை வடபழனி காவல்நிலையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட கார் திடீரென தீப்பிடித்து எரிந்த‌தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு கோடம்பாக்கம் அருகே மாதரசன் என்பவர் மதுபோதையில் காரை ஓட்டிவந்த‌தால், அவர் ஓட்டிவந்த காரை பறிமுதல் செய்த போலீசார், வடபழனி காவல்நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்ட போலீசார், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வடபழனி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்