பாம்பு, எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்...

கரும்பு நிலுவை தொகையை பெற்று தர வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பாம்பு மற்றும் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர்.
பாம்பு, எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்...
x
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பாலக்கரை சந்திப்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மூன்றாவது நாளான இன்று, விவசாயிகள், பாம்பு, எலிக்கறி தின்று தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தின் போது கரும்பு நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்