நேரடி கரும்பு கொள்முதல் - விவசாயிகள் மகிழ்ச்சி...

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, கூட்டுறவுசங்கங்கள் மூலம் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்வதால் திருச்சி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
x
அங்குள்ள திருவளர்சோலை கிராமத்தில், அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை கூட்டுறவுசங்கங்கள் நேரடியாக கொள்முதல் செய்துள்ளன. விலை குறைவாக இருந்தாலும் பெரும் நஷ்டம் ஏற்படாது எனக் கூறிய விவசாயிகள், இன்னும் 3 தினங்களில் வியாபாரிகளும் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யவார்கள் என தெரிவித்தனர். எதிர் வரும் காலங்களிலும் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்