பிரபல ரவுடி சூர்யா அதிரடி கைது

சென்னையில், துப்பாக்கியை காட்டி மிரட்டி, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரபல ரவுடி சூர்யா அதிரடி கைது
x
சென்னையில், துப்பாக்கியை காட்டி மிரட்டி, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த ரவுடி சூர்யா மீது 6 கொலை உள்ளிட்ட 34 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர், கடந்த அக்டோபர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தனது கூட்டாளிகளுடன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார். ரவுடி சூர்யாவின் ஆட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, அவரைப் பிடிக்க சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன் பேரில், தாம்பரம் பகுதியில் பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்த சூர்யா மற்றும் அவனது கூட்டாளிகளை, பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்த துப்பாக்கி மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்