மக்கள் பயன்பாட்டிற்காக 555 புதிய பேருந்துகள் - முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், 140 கோடி ரூபாய் மதிப்பில், 555 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
x
தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், 140 கோடி ரூபாய் மதிப்பில், 555 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய பேருந்துகளில், அகலப்படுத்தப்பட்ட படிக்கட்டுகள், ஒலிப்பெருக்கி வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு இடவசதி உள்ளிட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் இயக்கப்பட உள்ள பேருந்துகளில் அரசின் 10 ரூபாய் குடிநீர் பாட்டில் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்