தருமபுரம் ஆதினத்தில் தங்க காசுகள் கொள்ளை?

தருமபுரம் ஆதீனத்தில், சொக்கநாதர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த காசு மாலையில், 120 காசுகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தருமபுரம் ஆதினத்தில் தங்க காசுகள் கொள்ளை?
x
தருமபுரம் ஆதீனத்தில், சொக்கநாதர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த காசு மாலையில், 120 காசுகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள தருமபுரத்தில், இயங்கி வரும் ஆதீனத்தில், சொக்கநாதருக்கு என தனி சன்னிதி அமைந்துள்ளது. சொக்கநாதருக்கு 158 சவரன் அளவில் காசு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாலையில் இருந்த 120 காசுகள் மாயமாகியுள்ளதாக, திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை குற்றம்சாட்டியுள்ளது. தங்க காசுகள் மாயமானதைக் கண்டு  அதிர்ச்சி அடைந்த ஆதீன மடாதிபதி ஷண்முகதேசிக பரமாச்சாரிய சாமிகள், விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்