திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளுக்கு தடையில்லை

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் புயல் நிவாரண பணிகளை தொடர்ந்திட தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளுக்கு தடையில்லை
x
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் புயல் நிவாரண பணிகளை தொடர்ந்திட தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், புயல் நிவாரண பணிகளை தொடர அனுமதி கோரி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை ஏற்று கொண்ட தேர்தல் ஆணையம், நிவாரண பணிகளை தொடர்ந்திட அனுமதி அளித்துள்ளது. ஆனால், இந்த பணிகளில் அரசியல்வாதிகள் யாரும் ஈடுபட கூடாது என்றும், அரசு அதிகாரிகள் மட்டுமே ஈடுபட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றப்பட்ட வேண்டும்  என்றும் தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்