ஐஜி மீதான பாலியல் புகார் : வழக்கை தனிநீதிபதிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்க விதித்திருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
ஐஜி மீதான பாலியல் புகார் : வழக்கை தனிநீதிபதிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு
x
லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்க விதித்திருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில், விசாரித்த விசாகா கமிட்டி, வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரைத்தது. ஆனால், சிபிசிஐடி விசாரிக்க தடைகோரி ஐஜி  மனுதாக்கல் செய்திருந்தார். அதேபோல், ஐஜியை இடமாற்றம் செய்யுமாறு பெண் எஸ்பியும் மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வு, சிபிசிஐடி விசாரணைக்கான தடையை நீக்கியது. அதோடு, வழக்கை தனி நீதிபதிக்கு மாற்றிய அமர்வு, அந்த நீதிபதி யார் என்பதை தலைமை நீதிபதி அறிவிப்பார் என்றும் கூறியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்