கரும்பு இல்லாமல் ரசாயன உரம் கலந்து சர்க்கரை உற்பத்தி

பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரம் , அஸ்கா , ஆகியவற்றை கலப்படம் செய்து நாட்டு சக்கரை தயாரிப்பதாக விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
x
பயிர்களுக்கு பயன்படுத்தப்படும்  ரசாயன உரம் , அஸ்கா , ஆகியவற்றை கலப்படம் செய்து நாட்டு சக்கரை தயாரிப்பதாக  விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நாட்டு  சக்கரை, குண்டு  வெல்லம் , அச்சு வெல்லம்  அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில்  கடந்த 2 ஆண்டுகளாக  கரும்பு  சாகுபடி குறைத்தபோதிலும்  வெல்ல உற்பத்தி குறைய வில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் கர்நாடக மாநிலம் மாண்டியாவில்  இருந்து கருப்பு வெல்லத்தை வாங்கி வந்து  அதில் அஸ்கா, சூப்பர் பாஸ்பேட் உரம், , மற்றும்   ரசாயன கலர் பயன்படுத்தி 99 சதவிகித கலப்பட வெல்லம் தயாரிக்கப்படுவதாக, விவசாயிகள் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்