சிகிச்சையின் போது வயிற்றில் நாப்கின் வைத்து தைத்தார் என டீன் மீது புகார்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் வசந்தாமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
x
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் வசந்தாமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவி அஜிதா, மகப்பேறு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது மருத்துவர் வசந்தாமணி, அறுவை சிகிச்சையின் போது, வயிற்றுக்குள் சானிடரி நாப்கின் வைத்து தைத்து விட்டதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, மருத்துவர் வசந்தாமணி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் கணவர் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்