பொங்கல் பண்டிகை : வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு உரிய விலை கிடைக்காததால் தஞ்சாவூர் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை : வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்
x
பொங்கல் பண்டிகை, வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கரும்பு, பச்சரிசி, அச்சு வெல்லம் ஆகிய பொருட்களின் தேவை அதிகமாக இருக்கும். எனவே, தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, வீரமாங்குடி, மணலூர் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பருவமழை கைகெடுக்காததால் கரும்பு மகசூல் பாதித்து, வெல்லம் உற்பத்தி குறைந்திருப்பதாக கூறிய விவசாயிகள், 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம், 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் கரும்பு விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்