ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்
x
* ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதற்கு எதிராக தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் விதிகளை ஜனவரி 31க்குள்  அறிவிக்க வேண்டும் எனவும், அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு  தடை செய்வதாகவும் கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்ட்டார்.

* இந்த உத்தரவை எதிர்த்து, ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் மேல்முறையீடு செய்திருந்த நிலையில்,   இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, ஆன்லைன் மருந்து விற்பனை விதிகளை மத்திய அரசு முறைப்படுத்தும்  வரை, தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்