சிசிடிவி கேமரா உதவியால் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த கொள்ளையன் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை சிசிடிவி கேமராவின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
சிசிடிவி கேமரா உதவியால் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த கொள்ளையன் கைது
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை சிசிடிவி கேமராவின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். ஊத்தங்கரை பகுதியில் தொடர் திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த சில நாடுகளுக்கு முன்னர் திருடு போனது. அங்குள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆராய்ந்த போது,  தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது, ஊத்தங்கரை அண்ணா நகரை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்