பண்பாட்டை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த சிலம்பாட்டம்

சென்னை மயிலாப்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலாச்சார திருவிழா நடைபெற்றது.
பண்பாட்டை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த சிலம்பாட்டம்
x
சென்னை மயிலாப்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலாச்சார திருவிழா நடைபெற்றது. தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் வானம் கலைக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. கணியான் கூத்து நிகழ்ச்சி மூலம் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான வடிவில் இடம் பெற்றது. இதனைத் தவிர சிலம்பாட்டம், ஹிப் ஹாப் நடனம்ஆகியவையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இது போன்ற கலாச்சார திருவிழாக்கள்  பாரம்பரியத்தை புரிந்து கொள்ளும் வகையில் அமைந்து உள்ளதாகவும்,  மற்ற மாவட்டங்களிலும் இந்த விழாக்களை நடத்த முன்வர வேண்டும் என்று பார்வையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்