உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக 8 மாவட்டங்களில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்

உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்த்து தெரிவித்து விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில், விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்
ஈடுபட்டு வந்தனர்.14 வது நாளாக இன்று காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். அரசு தரப்பில் யாரும் பேச்சுவார்த்தைக்கு முன் வராததால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சென்னையில் ஜனவரி 3ம் தேதி சட்டப்பேரவை முற்றுகை மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் கொங்கு ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்