தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு...

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
ராமேஸ்வரத்தில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அப்போது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்ததால் அந்நாட்டு மீனவர்கள் திரும்பி சென்றனர். இதற்கிடையே, 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை, இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதோடு, தமிழக மீனவர்களை எச்சரித்து விரட்டி அடித்துள்ளனர். அடுத்தடுத்த நடந்த இந்த சம்பவங்களால், மீன்பிடிக்க முடியால் தமிழக மீனவர்கள் கரை திரும்பினர். 

Next Story

மேலும் செய்திகள்