தனக்கு ஹெச்.ஐ.வி நோய் வந்ததற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் - பெண் புகார்

தனக்கு ஹெச்.ஐ.வி. நோய் வந்ததற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் என பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
x
சென்னை மாங்காடைச் சேர்ந்த பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, ஹெச்.ஐ.வி. பாதித்த ரத்தம் தனது உடலில் ஏற்றப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்களை வைத்தே தனக்கு சிகிச்சை அளித்ததாக  அவர் கூறியுள்ளார். தனக்கு சிகிச்சை அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அந்த பெண், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  மேலும், அரசு சார்பில் தற்போது வரை யாரும் தம்மை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்