தனியார் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவசாயி...

தனியார் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவாசாயி , பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டதாக கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை சக விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தனியார் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவசாயி...
x
தனியார் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விவாசாயி , பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டதாக கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை சக விவசாயிகள் முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகேயுள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமலு என்ற விவசாயி, தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை,  அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டி, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதன்மீது நடவடிக்கை எடுக்காத‌ நிலையில், ஸ்ரீ ராமலு பசுமை 

தீர்ப்பாயத்தில்  வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஸ்ரீ ராமலு திடீரென கைது செய்யப்பட்டார். அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது 

செய்துள்ளதாக கூறி விவசாயிகள் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருக்கும் 

விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்