சாக்கடையில் பிணமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை...

தஞ்சையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சாக்கடையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாக்கடையில் பிணமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை...
x
தஞ்சை பழைய பேருந்து நிலையம் பின்புறம் ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள கழிவு நீரில் பிறந்து சிலமணி நேரங்களே ஆன குழந்தையின் சடலத்தை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டனர். பெண் குழந்தை என்பதால், வேண்டுமென்றே யாரேனும் வீசி விட்டு சென்றிருக்க கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும்  போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்