என்எல்சி 3வது சுரங்கம் அமைக்கும் திட்டம் : அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 3வது நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
x
நெய்வேலியில் மந்தாரகுப்பம் முதல் சேத்தியாதோப்பு, கம்மாபுரம் வரை 3-வது திறந்த வெளி சுரங்கம் அமைக்க என்.எல்.சி. நிர்வாகம்,  நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு 26 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் நெய்வேலி 2வது சுரங்கம் அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்