மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு : நண்பனை அடித்து கொலை செய்த இளைஞர்...

புதுக்கோட்டை அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் தனது சக நண்பனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
புதுக்கோட்டை மாவட்டம் நம்ம கோட்டையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரும், ஆலங்குடியைச் சேர்ந்த அவரது நண்பர் ரகுமானும் நேற்று இரவு ஆலங்குடியில் உள்ள ஒரு புதிய கட்டிடத்தின் மேல் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்  ரகுமான், சிவசுப்பிரமணியனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார், சிவசுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் ரகுமானை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்