டம்ளரில் நீர் தெளித்து புயலுக்கு தப்பிய செடிகளை காக்க போராடும் விவசாயிகள்

புதுக்கோட்டை அருகே புயலுக்கு தப்பிய மல்லிகை செடிகளின் உயிர் காக்க, விவசாயிகள் டம்ளரில் நீர் தெளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
x
கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டம் வம்பன்கொத்தகோட்டை கிராமத்திற்கு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், திண்டாடும் விவசாயிகள், டம்ளர் மூலம் தண்ணீர் தெளித்து பூ செடிகளின் உயிரை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உடமை, வாழ்வாதாரம் இழந்து நிற்கதியில் நிற்கும் தங்களுக்கு, உதவ அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்