"தமிழகம்-கர்நாடகா சேர்ந்து ராசிமணலில் அணை கட்டலாம்" - நல்லசாமி,விவசாய சங்கம்

மத்திய அரசு, கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் இணைந்து, தமிழக எல்லையான ராசிமணலில் புதிய அணையை கட்டலாம் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
x
மத்திய அரசு, கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் இணைந்து, தமிழக எல்லையான ராசிமணலில் புதிய அணையை கட்டலாம் என  தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்த அணையில் தேக்கப்படும் தண்ணீரை தமிழகமும், அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கர்நாடகாவும் பங்கீட்டு கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கள் இயக்கம் சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்