கோவை, சென்னை, விழுப்புரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...

இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி தீட்டியதாக கோவையில் கைதான நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
x
கோவை மாவட்டம் உக்கடம்  பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள பைசல், ஆசிக் மற்றும் குனியமுத்தூரில் உள்ள அன்வர் ஆகியோர் இல்லத்தில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. கொச்சியில் இருந்து வந்த 18 அதிகாரிகள், கோவையில் மட்டும் 3 இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள இஸ்மாயில், சென்னை வியாசர்பாடியில் உள்ள ஜாபர் சாதிக் அலி, ஓட்டேரியில் உள்ள சலாவுதீன், சம்சுதீன் ஆகியோரது வீடுகளிலும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடும் விசாரணை நடத்தப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்