கோடையில் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அபாயம்

தமிழ்நாட்டில், வருகிற கோடை காலத்தில் அதிகமான மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
கோடையில் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அபாயம்
x
தமிழ்நாட்டில், வருகிற கோடை காலத்தில் அதிகமான மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. கூடங்குளம் அணு உலையில் இருந்து சீரான மின்சாரம் கிடைக்காததால், மின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அனல் மின் நிலையங்களில் அடிக்கடி நிகழும் பழுதுகள் மற்றும் சில மின் திட்டங்கள், இன்னும் முழுமை அடையாததாலும் இந்த நிலை உருவாகி உள்ளது. எனவே, கோடையில், மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்