கேரள ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார் விவகாரம் : மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரளாவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி மாணவி துறைத்தலைவர் கர்ண மகாராஜன் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தார்.
கேரள ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார் விவகாரம் : மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
x
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும்  கேரளாவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி மாணவி துறைத்தலைவர் கர்ண மகாராஜன் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தார்.  இது தொடர்பாக விசாரணை நடத்த விசாக கமிட்டி  அமைக்கப்பட்டது. இந்நிலையில் கர்ண மகாராஜனை பணியிடை நீக்கம் செய்து  விசாரணையை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்