குட்கா முறைகேடு : அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை...

குட்கா விவகாரம் தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.
குட்கா முறைகேடு : அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை...
x
தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய , அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதனடிப்படையில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் காலத்தில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்த பிவி ரமணா, தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் உள்ளிட்டோரிடம் , கடந்த 15-ம் தேதி முதல் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் இரண்டாம் நாளான நேற்று, 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்