பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்
பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்
சென்னையில் திருமணமான பெண்களுக்கான, 'திருமதி சென்னை' அழகிப் போட்டி நடைபெற்றது. கடந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கி பல சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டிகளை தொடர்ந்து, நேற்று நடந்த இறுதிப் போட்டிக்கு 25 பேர் தேர்வாகி இருந்தனர். இதையடுத்து, நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், அவர்கள் ஒய்யார நடை நடந்து அசத்தினர். நிகழ்ச்சியில், விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, நடிகைகள் பிரியா ராமன், அதுல்யா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். பாரம்பரிய ஆடை அணிந்து வந்த, திருமணமான பெண்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
Next Story