கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் : உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் : உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் : உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தென்பாதி,ஏத்தக்குடி கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 
நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பங்கேற்று தார்ப்பாய் உள்ளிட்ட 27 பொருட்கள் அடங்கிய பெட்டிகளை புயல் பாதித்த 970 பேருக்கு  வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்கில் நிவாரண உதவிப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சி தாவுபவர்களுக்கு, மக்களிடம் மரியாதை இருக்காது என்றார். 


Next Story

மேலும் செய்திகள்