கஜா புயல் பாதிப்பு - அரசாணை வெளியீடு

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகள், கஜா புயல் அதிகமாக பாதித்த இடங்கள் என, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கஜா புயல் பாதிப்பு - அரசாணை வெளியீடு
x
மிதமான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கு தாலுகா, திருச்சி மாவட்டத்தின் மருங்காபுரி, மணப்பாறை தாலுகாக்கள், அறிவிப்பு

குறைவான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தாலுகாக்களும், 

கரூர் மாவட்டத்தின் கடவூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், மண்மங்கலம் தாலுகாக்களும்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம் தாலுகாக்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மேலூர், உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் ஆகிய தாலுகாக்களும்

சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, தேவக்கோட்டை, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம், இளையாங்குடி தாலுகாக்களும் குறைவான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாக்களும்

ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமநாதபுரம், ராமேஷ்வரம், கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, திருவாடானை தாலுகாக்களும்

திருச்சி மாவட்டத்தின் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் தாலுகாக்களும் குறைவான பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்