சேலம் ஆட்சியர் ரோகினிக்கு கின்னஸ் சான்றிதழ்
சேலம் ஆட்சியர் ரோகினிக்கு கின்னஸ் சான்றிதழ்
சேலம் ஆட்சியருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். உலக கை கழுவும் தினத்தையொட்டி, கடந்த அக்டோபர் 15 ஆம் தேதியன்று, சேலத்தில் 15 லட்சம் பேரை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உலக சாதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை அங்கீகரித்து, சேலம் ஆட்சியர் ரோஹிணிக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வீரகனூரில் நடைபெற்ற விழாவில், கின்னஸ் சான்றிதழை ஆட்சியர் ரோஹிணிக்கு வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
Next Story