திருச்சி : லால்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருச்சி மாவட்டம் லால்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 12 போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி : லால்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
x
திருச்சி மாவட்டம் லால்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 12 போலீஸார் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணிவரை தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் பணியில் அல்லாத பத்திர எழுத்தர்கள், புரோக்கர்கள் என 7 பேர் மற்றும் லால்குடி பத்திரபதிவு சார்பதிவாளர் ஹேமலதா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். இறுதியாக கணக்கில் வராத ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்