இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது

சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்
x
சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த வினோத் என்ற இளைஞர், காலடிபேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வினோத் மீது கற்களை வீசி தாக்கி இரு சக்கர வாகனத்தை திருடி சென்றனர்.  இது குறித்து வினோத் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார்,  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சுனாமி குடியிருப்பை சேர்ந்த அஜீத் ,பிரசாத் ,பூபாலன் ,பாலாஜி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்