குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி
திருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.
திருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார். ஆரம்பம் முதலே விபத்து ஏற்படும் வகையிலேயே பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதும் நிலை ஏற்பட அங்கு இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடியுள்ளனர் இதை தொடர்ந்து பேருந்தில் உள்ளவர்களும் கூச்சலிடவே பேருந்தை நிறுத்திவிட்டு அவர் ஓட முயன்றுள்ளார் அங்கிருந்த பொது மக்கள் ஓட்டுநரை கடுமையாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பலமுறை குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர் சேனாபதி என கூறப்படுகிறது.
Next Story