கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதற்கு எதிர்ப்பு : மதுபாட்டில்களை சாலையில் உடைத்து பொதுமக்கள் மறியல்
கொடைக்கானல் பழனிமலை சாலையில், நடைபெற்று வரும் , சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் பழனிமலை சாலையில், நடைபெற்று வரும் , சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலின் போது கடையில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை சாலையின் நடுவே போட்டு அவர்கள் உடைத்தனர். தொடர்ந்து கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதற்கு எதிராக, ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் கொடைக்கானல் பழனி மலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Next Story