ஜன.1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயருகிறது - சகிலன், கேபிள் டி.வி. பொது ஆப்ரேட்டர்கள் சங்கம்

நாடு முழுவதும் கேபிள் டிவி கட்டணத்தை, ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
x
நாடு முழுவதும் கேபிள் டிவி கட்டணத்தை, ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை கண்டித்தும் டிஜிட்டல் ஒளிபரப்பை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க கோரியும்,  வரும் 24ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில்  முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த, சங்கத்தின் நிறுவனர் சகிலன், இந்த தகவலை தெரிவித்தார்.  மத்திய அரசு கொண்டு வர உள்ள கட்டண உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரியை தடுக்க தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்