வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள்...

தஞ்சையில் தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி பாதாள சாக்கடைக்குள் இறங்கி, வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் அவல நிலை தொடர்கிறது
வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள்...
x
தஞ்சையில் கையுறை, முக கவசம் என எவ்வித பாதுகாப்புமின்றி பாதாள சாக்கடைக்குள் இறங்கி, வெறும் கைகளால் கழிவுகளை அள்ளும் அவல நிலை தொடர்கிறது. அவ்வப்போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தாலும், வேறு வழியின்றி, தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து, வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணத்தில் ரோபோக்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவது போல, தஞ்சையிலும் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்