மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - டெல்டா மாவட்ட விவசாயிகள்
மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்டாவில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. ஒரு மாதம் ஆகியும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பயிர்களை காப்பாற்ற உடனடியாக கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஏரகரம் பகுதியில் கறுப்பு கொடிகளுடன் வயல்களில் இறங்கி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story