தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் அதிக பயனாளிகளை இணைத்து நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.
x
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வருங்கால வைப்பு நிதி கூடுதல் ஆணையர் மதியழகன்  இதனைத் தெரிவித்தார். கோவை, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, நாகர்கோவில்  மண்டலங்களில் ஆன்லைன் மூலம் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் வைப்பு நிதி கணக்கு வைத்துள்ள ஊழியர்கள், தங்களின் ஆதார் எண், மொபைல் எண், பான் எண்  ஆகியவைற்றை இணைத்துக் கொண்டால் வைப்பு நிதி விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  கூடுதல் ஆணையர் மதியழகன் எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்