மாணவர்களின் முகப்பதிவுடன் வருகை பதிவேடு திட்டத்தை தொடங்கி வைத்தார் - அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவிகளின் முக பதிவுகளுடன் கூடிய வருகை பதிவேடு திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
x
பள்ளிகளில் பழைய முறையிலான மாணவர்கள் வருகை பதிவேடு முறைக்கு மாற்றாக, ஃபேஸ் ஐ.டி. எனப்படும் மாணவ- மாணவிகளின் முக பதிவுகளுடன் கூடிய நவீன வருகைப் பதிவேடு திட்ட துவக்க விழா சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அடுத்த மாதம்  முதலமைச்சர் துவக்கி வைப்பார் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்