குரங்குகள் தொல்லையால் இடம்பெயரும் மக்கள்

திருச்சியை அடுத்த கல்லணையை ஒட்டிய தோகூரில் துள்ளித் திரியும் குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரங்குகள் தொல்லையால் இடம்பெயரும் மக்கள்
x
திருச்சியை அடுத்த கல்லணையை ஒட்டிய தோகூரில் துள்ளித் திரியும் குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னை, வாழை என பசுமை போர்த்திய பகுதியான அங்கு சில நூறு எண்ணிக்கையில் உள்ள குரங்குகள், வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை தூக்கிச் செல்வதும், பப்பாளி, தென்னை, வாழை பழங்களை பறித்துச் செல்வதும் நாளுக்குநாள் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இடம் பெயரும் அளவுக்கு யோசித்து வருவதாக கூறும் மக்கள், குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்