நாடு பாலைவனமாகிறது - சீமான்

கிருதுமால் நதியை மீட்க கோரி மதுரையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
x
கிருதுமால் நதியை மீட்க கோரி மதுரையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.  வைகை- கிறிதுமால் நதி உரிமை மீட்பு குழு சார்பில் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திறகனுாரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பாசன விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கிறிதுமால் நதி ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்