பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை : நூலக உதவியாளர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நூலகத்திற்கு சென்ற பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நூலக உதவியாளர் சுப்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நூலகத்திற்கு சென்ற பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நூலக உதவியாளர் சுப்பு கைது செய்யப்பட்டுள்ளார். வடசேரியை பகுதியில் உள்ள சித்ரா நூலகத்திற்கு பள்ளி மாணவர்கள் 2 பேர் நேற்று மாலை சென்றுள்ளனர். இதில் நூலக உதவியாளர் சுப்பு, மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சுப்புவை கைது செய்தனர்.
Next Story