"தினத்தந்தி" சார்பில் மாணவர்களுக்கு நிதியுதவி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவ-மாணவிகளுக்கு தினத்தந்தி சார்பில் 3 லட்ச ரூபாய், நிதி உதவி வழங்கப்பட்டது.
x
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவ-மாணவிகளுக்கு தினத்தந்தி சார்பில் 3 லட்ச ரூபாய், நிதி உதவி வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவ - மாணவிகளுக்கு, தினத்தந்தி சார்பில் தலா 10 ஆயிரம் வீதம், 3 லட்சம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கும் விழா சென்னை குரோம்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களை சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர், கல்விப்பணியில், தினத்தந்தி நாளிதழ் சிறப்பாக செயல்படுவதாக புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்