"புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சேர்ந்து விட்டதா?" - அமெரிக்காவில் இருந்து கேட்டறிந்த பாதுகாப்பு அமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சென்று சேர்ந்து விட்டதா? என அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்துள்ளார்.
புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சேர்ந்து விட்டதா? - அமெரிக்காவில் இருந்து கேட்டறிந்த பாதுகாப்பு அமைச்சர்
x
இந்திய, பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து டிரம்ப் நிர்வாகத்துடன் விவாதிக்க உள்ளார். இதனிடையே டெல்லியில் உள்ள தனது துறை அதிகாரிகள் மற்றும் சென்னையில் உள்ள நண்பர்களிடம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தான் அளித்த வாக்குறுதிபடி மண்ணெண்ணெய் சென்று சேர்ந்ததா என வினவி உள்ளார். அதிகாலையில் அமெரிக்க நிர்வாகத்துடனான சந்திப்புக் தயாராகி வந்த நிலையிலும், மண்ணெண்ணெய் சென்று சேர்ந்ததா என நிர்மலா சீதாராமன் வினவியது, அவரது துறை அதிகாரிகள் மட்டுமல்லாது பலரையும் ஈர்த்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்