முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் - திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் விவசாயிகள் மனு

திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள், விவசாயிகள் மனு.
முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் - திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் விவசாயிகள் மனு
x
கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயல் ஏற்படுத்திய பயிர் சேதங்களை கணக்கிடும் அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் தலையீட்டால் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே கணக்கெடுப்பு செய்கின்றனர் என்றும், 
பாரபட்சமின்றி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்